Tuesday, March 15, 2011

சுனாமீன்

சமீபத்தில் என் குட்டி நண்பன் தாணு தன தாத்தாஉடன் பீச்சிக்கு சென்று இருந்தான்.
அவனது தாத்தா அவனுக்கு மீன் பிரை வாங்கி தந்தார்.
தாணு கேட்டான் "தாத்தா, இது என்ன மீன்...?"
"சங்கரா..." தாத்தா சொன்னார்.
"எனக்கு வேற மீன் வேணும்..."
"என்ன மீன் வேணும்..."
தாணு சொன்னான் "தாத்தா எனக்கு சுனாமீன் தன வேணும்..."
"அது மீன் இல்லை... சுனாமி..."
"ம்ம்ம்... அதன்... அந்த சுனாமீன் தன வேணும்..."
சமீபத்தில் வந்த சுனாமி நியூஸ் எல்லாம் பார்த்துட்டு அது ஒரு ஒரு டைப் மீன் என்று நினைத்து விட்டன போல...

- பவளா

No comments:

Post a Comment

Your comments are Welcome... Comments can be added Anonymously and will be Visible after Moderation...